வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நோனாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர்  வசந்தா (57). இவரது கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து வசந்தா, தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் வசந்தா, சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். இந்நிலையில், நேற்று காலை வசந்தாவின் வீட்டு கதவு திறந்து இருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவருக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் அவா் வந்து பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 சவரன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: