திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும். மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.