×

ஆண்டிபட்டி-வத்தலக்குண்டு மார்க்கத்தில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி-வத்தலக்குண்டு மார்க்கத்தில் சேதமடைந்த சாலையால் போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் சில்வார்பட்டி, டி.புதூர், அணைக்கரைபட்டி, முணாண்பட்டி, நடுக்கோட்டை, சேடபட்டி,  புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் தினசரி 4 அரசு பஸ்களும் மற்றும் டூவீலர், கார்,  ஆட்டோ, லாரி உள்ளிடட் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக  ஆண்டிபட்டி- வத்தலக்குண்டு சாலை மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால், வாகனஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். மேலும்,  இப்பகுதியில் விளையும் விளைபொருட்களை கொண்டு செல்லவும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்கள் சென்று  வருவதற்கும் சிரமமாக உள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஆண்டிபட்டி- வத்தலக்குண்டு மார்க்கத்தில் பல இடங்களில் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு  லாயக்கற்று உள்ளது. அதிக வளைவுகளை கொண்ட இச்சாலையில் குண்டு, குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Antibattle- ,Wattalaku Markam , Motorists suffer due to damaged road on Andipatti-Wattalakundu road
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...