டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நாட்டு மக்களுக்கு பொதுவானவர் என்பதால் அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்யகூடாது. வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த பொதுநல வழக்கு மார்ச் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது.