திருப்பரங்குன்றம், மார்ச் 6: திருப்பரங்குன்றம் அருகே பசுமலையில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்று தம்பதி வீட்டின் முன்பு போர்டு வைத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் லோகராஜ். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசலில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என எழுதப்பட்ட பதாகையை தொங்கவிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இந்த பதாகையை பார்க்கும் இப்பகுதியை சேர்ந்த பலரும் தாங்களும் இதுபோன்று வீட்டின் முன்பு எழுதி வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.