சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுகவுடன் இன்று மாலை 5 மணிக்கு திமுக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு தொடர்பாக 3வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே கொடுக்க திமுக முன்வந்திருப்பதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.