சென்னை: கடைசி நிமிடம் வரை எங்களை நம்ப வைத்து ஏமாற்றி அரசியலாக்கிவிட்டது எடப்பாடி அரசு என கருணாஸ் தெரிவித்துள்ளார். முக்குலத்தூர் சமுதாயத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருப்பதாக கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமணலிங்க தேவர் பெயர் வைக்காமல் பாஜக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டது. சசிகலாவுக்கு வாழ்நாள் முழுவதும் நான் ஆதரவாளராக இருப்பேன் என்று கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.