பொது எதிரியான பாஜக-வை வீழ்த்த என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார்!: புதுவை மாநில காங். தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன்..!!

புதுச்சேரி: பொது எதிரியான பாஜகவை வீழ்த்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் செய்தியாளருக்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர், பாஜகவை வீழ்த்த எதையும் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளோம். புதுச்சேரியில் மதசார்பற்ற அணிகள் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரசை திமுக அழைத்து வந்த நிலையில் காங்கிரசும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: