வயிற்றுக்குள் இடம் பிடித்த பாம்பு: நாஞ்சில் சம்பத் கல கல வயிற்றுக்குள் இடம் பிடித்த பாம்பு: நாஞ்சில் சம்பத் கல கல

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது: கூவத்தூர் கூத்தில் உன்னை முதல்வராக்கிய அம்மையாருக்கும், தான் முதல்வரானதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறாரே என்ன நியாயம்? ஒரு வேட்டை நாய், பாம்பை துரத்தியது. பயந்துபோன பாம்பு அவ்வழியாக வந்த வழிபோக்கனிடம், வந்து வேட்டைநாய் என்னை கடித்து குதற வருகிறது. எனக்கு கொஞ்சம் அடைக்கலம் கொடுக்கவும் என்று கேட்டுள்ளது. அதற்கு வழிபோக்கன் என்னோட ஆசனவாய் வழியாக புகுந்து வயிற்றுக்குள் புகுந்துகொள் என்றான்.  உடனே அந்த பாம்பு ஆசனவாய் வழியாக புகுந்து வயிற்றுக்குள்ள போய் தஞ்சம் புகுந்தது.

அப்போது அங்கு வந்த நாய் சுற்றி பார்த்துட்டு சென்றுவிட்டது. உடனே அந்த வழிபோக்கனுக்கு வயிற்று வலி அதிகமாகி துடிக்கிறார். அப்போது பாம்பிடம் சொன்னான், வேட்டை நாய் போய்விட்டது. கீழே இறங்கி வா என்று. அதற்கு அந்த பாம்பு, இந்த இடமே எனக்கு கம்பர்டபிளா இருக்கு. நான் இங்கேயே இருந்துடுறேன்னு. அந்த பாம்பு சொல்லிச்சாம். நான் கேட்கிறேன், அந்த பாம்புக்கும், பழனிசாமிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?. எடப்பாடியை தாண்டி சென்றால், அவரை யார் என்று மக்களுக்கு தெரியாது. ரயில் நிலையத்துக்கு சென்றால், அவரை சுமை தூக்கும் தொழிலாளி என்றுதான் மக்கள் நினைப்பார்கள். அவரை, யார் என்றே அடையாளம் தெரியாது என்றார்.

Related Stories: