ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது: கூவத்தூர் கூத்தில் உன்னை முதல்வராக்கிய அம்மையாருக்கும், தான் முதல்வரானதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறாரே என்ன நியாயம்? ஒரு வேட்டை நாய், பாம்பை துரத்தியது. பயந்துபோன பாம்பு அவ்வழியாக வந்த வழிபோக்கனிடம், வந்து வேட்டைநாய் என்னை கடித்து குதற வருகிறது. எனக்கு கொஞ்சம் அடைக்கலம் கொடுக்கவும் என்று கேட்டுள்ளது. அதற்கு வழிபோக்கன் என்னோட ஆசனவாய் வழியாக புகுந்து வயிற்றுக்குள் புகுந்துகொள் என்றான். உடனே அந்த பாம்பு ஆசனவாய் வழியாக புகுந்து வயிற்றுக்குள்ள போய் தஞ்சம் புகுந்தது.