திருமலை: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் ஆர்ஜித சேவை, முன்னுரிமை தரிசனம் தொடங்கப்படும்,’ என்று தலைமை செயல் அலுவலர் ஜவகர் தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் ஜவகர் நேற்று அளித்த பேட்டி: திருப்பதியில் கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரத்து செய்யப்பட்ட அனைத்து ஆர்ஜித சேவைகள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான முன்னுரிமை தரிசனம் அடுத்த மாதம் 14ம் தேதி தெலுங்கு வருட பிறப்பான உகாதியன்று மீண்டும் தொடங்கப்படும்.