சிம்லா: இமாச்சலப் பிரதேச பட்ஜெட் கூட்டத் தொடர் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்துவதற்காக வந்த ஆளுநர் பண்டாரு தத்தரேயாவை காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் தடுத்தனர். அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.