×

குப்பை லாரி சிறைபிடிப்பு

ஆலந்தூர்: பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டுக்கு சொந்தமான 25 ஏக்கர் இடத்தை அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இங்கு குப்பை கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று குப்பை கிடங்கிற்குள் சென்று, மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த லாரிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் இனிமேல் குப்பை கொட்ட மாட்டோம் என உறுதியளித்ததால் கலைந்து சென்னர்.

Tags : Garbage truck capture
× RELATED அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில்...