பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் 2ம் கேட் கடற்கரைப்பகுதியில் நிர்வாண நிலையில் பெண் சடலம் கிடப்பதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ. சைமன்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிர்வாண நிலையில் கிடந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.