×

பெண்கள் மொபைல் வாங்க 10% தள்ளுபடி.. காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை : மகளிர் தினத்தை கொண்டாடும் ஆந்திர அரசு!!

சென்னை : மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மொபைல்கள் வாங்க 10% தள்ளுபடியை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. மேலும் காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8ம் தேதி விடுமுறையையும் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்கள் பாதுகாப்பு “ஆப்”பான திஷா செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10% தள்ளுபடி வழங்குவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்தது.

மார்ச் 8ம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும். மேலும் மார்ச் 8ம் தேதி அனைத்து பெண்கள் காவல்துறையினருக்கும் விடுமுறை வழங்குவதோடு, அந்த நாளைக் குறிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளையும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். மேலும் மகளிர் தினத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த குறும்பட போட்டிகளையும் நடத்தவும், அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அன்றைய தினம் மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

Tags : Andhra Pradesh ,Women's Day , ஆந்திர அரசு
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி