சேந்தமங்கலம் : எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம் பகுதியில் மிகப்பெரிய ஏரி உள்ளது. மழை காலங்களில் கொல்லிமலையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கரை வழியாக நாமக்கல் - துறையூருக்கு அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏரிக்கரையில் சாலையில் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள், கடந்த சில மாதங்களாக சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.