கொல்கத்தா: சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பெண்களுடன் இணைந்து நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 65 டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கிவிட்டது. தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.