வேட்பாளர்களை இறுதி செய்ய தீவிரம்...! அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று ஆலோசனை

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். நேற்று நேர்காணல் முடிந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 8 ஆயிரத்து 200 பேர் விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தனர்.  

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related Stories: