புதுடெல்லி: அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் முன்னாள் ஓஎஸ்டி டாக்டர் நிகுஞ்ச் அகர்வாலை டெல்லி நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்தவமனையான சாச்சா நேரு பால் சிக்கிட்சாலயாவில் டாக்டர் அனுப் மொஹ்தா இயக்குநராக நியமிக்கப்பட்டபோது, அவர், டாக்டர் நிகுஞ்ச் அகர்வாலை சீனியர் ரெசிடென்ட் (ஆர்த்தோ) பதவிக்கு கடந்த 2015ம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் நியமிக்க ஒப்புதல் அளித்தார்.ஆனால், இந்த நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அவரது நியமனம் சட்டவிரோதமானது என்றும், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.