மங்களூரு: தென்கனரா மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று விதி முறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.36 லட்சத்து 17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்கனரா மாவட்டத்தில் 34,487 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 33,551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. படிப்படியாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைய வேண்டாம்.