பேத்தி கண்முன் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி: டிரைவர் கைது

ஆவடி: ஆவடி, அரிக்கமேடு பள்ளத்தெருவை சேர்ந்தவர் ராஜாபாதர் (65). நேற்று காலை. ராஜாபாதர், தனது பேத்தியை அழைத்து கொண்டு ஆவடி அருகே கன்னடபாளையத்தில் உள்ள பள்ளிக்கு புறப்பட்டார். செங்குன்றம் - ஆவடி செல்லும் மாநகர பஸ்சில் (தஎ-61ஆர்) சென்றனர். பஸ், கன்னடபாளையம் நிறுத்தத்தில் நின்றதும்,  பஸ்சின் முன் பக்க படிக்கட்டில் ராஜாபாதரும் இறங்க முயன்றார்.

அப்போது, திடீரென பஸ்சை டிரைவர் இயக்கினார். இதில், நிலைதடுமாறி அவர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததில்.  பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்த பேத்தி, தாத்தா உடலை கட்டி பிடித்து கதறி அழுதார். தகவலறிந்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவர் ஆவடி, கன்னிகாபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (57) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: