புதுடெல்லி: ‘ஓடிடி தளங்களில் சில குறிப்பிட்ட வகையான ஆபாச படங்கள் இடம் பெறுவதை முறைப்படுத்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,’ என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரியில் ஓடிடி.யில் வெளியான, ‘தாண்டவ்’ என்ற வெப் தொடரில், உபி மாநில போலீஸ், இந்து தெய்வங்கள், பிரதமர் கேரக்டரை இழிவுபடுத்தியதாக, அந்த தொடரை வெளியிட்ட அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய தலைமை அதிகாரி அபர்ணா புரோகித், இயக்குனர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இவர்களில் அபர்ணா புரோகித், முன்ஜாமீன் மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.