பதோர்தா : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல் சுற்று அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் இன்று எப்சி கோவா-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடப்புத் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் இன்று முதல் அரையிறுதி சுற்றுப்போட்டிகள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதியில் மும்பை-கோவா அணிகளும், 2வது அரையிறுதியில் ஏடிகே-நார்த்ஈஸ்ட் அணிகளும் மோதும். ஒவ்வொரு அரையிறுதியிலும் தலா 2ஆட்டங்கள் நடக்கும். இன்று பதோர்தாவில் நடக்கும் முதல் சுற்று அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் கோவா-மும்பை அணிகள் களம் காணுகின்றன. அரையிறுதி வாய்ப்பை கடைசியாக உறுதி செய்த கோவா கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை.