அண்ணாநகர்: அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த எடிசன், திருமங்கலம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு காரில் வந்த 4 பெண்கள், திருமணத்திற்காக விலை உயர்ந்த புடவைகள் வேண்டுமென கூறினர். அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த எடிசன், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர்களில் 3 பெண்கள் புடவைகளை திருடுவது பதிவாகி இருந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலீசாருக்கு எடிசன் தகவல் தெரிவித்தார். இதனால், சுதாரித்துக்ெகாண்ட 3 பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.