சென்னை: தேமுதிக சார்பில் ேபாட்டியிட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த 25ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வாங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட மனு தாக்கல் செய்தார். தொகுதி குறிப்பிடாமல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொண்டர்கள் படை சூழ வந்திருந்து விருப்ப மனுவை அவர் தாக்கல் செய்தார். அப்போது விஜய பிரபாகரன் அளித்த பேட்டி: