மதுராந்தகம்: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சி சார்பில் பணம் பட்டுவாடா, பரிசு பொருள் வினியோகம் உள்பட பல்வேறு சம்பவங்களை தடுக்க வட்டாட்சியர் தலைமையில், தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் தாலுகா வாரியாக ஒப்பந்த அடிப்படையில் புகைப்பட கலைஞர்கள், வீடியோ கேமரா மேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டார புகைப்பட கலைஞர்கள் சங்கம் மதுராந்தகத்தில் உள்ளது. இச்சங்கம், சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் பணிகளை இப்பகுதியில் உள்ள புகைப்பட கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.