மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் கட்சி தலைவர் கமல் தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் நேர்காணலின் போது, வேட்பாளர்களின் தகுதி விவரங்கள், கள நிலவரம் போன்றவற்றை கேட்டுள்ளனர். மேலும் தேர்தல் செலவிற்கு கட்சி சார்பில் பணம் எதிர்பார்க்கக் கூடாது. நீங்களே செலவு செய்து கொள்ள வேண்டும்.