தமிழகத்தில் புதிதாக 482 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர்  மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 50,209 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,53,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 490 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,36,963 பேர் குணமடைந்துள்ளனர். 3,978 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் மரணம் அடைந்துள்ளார். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,508 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: