வந்தவாசி: வந்தவாசி- திண்டிவனம் நெடுஞ்சாலை எஸ்.காட்டேரி கிராமம் அருகே நேற்று, தாசில்தார் சுதாகர் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுவையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த ஜெயந்தி என்பவரிடம் ரூ.61 ஆயிரம் ரொக்கம் இருந்தது. விசாரணையில், ஜெயந்தி ‘தனது உறவினருக்கு உடல் நிலை சரியில்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவிற்காக பணத்தை எடுத்து செல்கிறேன்’ என கூறினார். ஆனால், உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தனர்.