பெரம்பூர்: காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம், எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமலை (22). இவருக்கும், சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமிக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கட்டாயப்படுத்தி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிறது.