ஓசூரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

ஓசூர்: ஓசூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியிருந்து ஓசூர் வரும் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்திவருகின்றனர். சோதனையில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2.50 லட்சம் சிக்கியுள்ளது.

Related Stories: