சிவகாசி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது; போலீசார் விசாரணை

சிவகாசி: உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட நிலையில் வேனில் 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. வேனில் இருந்த விருதுநகர்அல்லம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சீனிவாசன் மற்றும் சங்கரவேல் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியதில் சிவகாசி ஆமத்தூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை சேகரித்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வேனுடன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் இருந்த சீனிவாசன் மற்றும் சங்கரவேலை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: