இன்று காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்

சென்னை: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 8 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு நடக்க இருக்கிறது. அ.தி.மு.க. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர் தேர்வு இன்று நடைபெறுகிறது. காலை, மாலை என இரு பிரிவுகளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.

Related Stories: