கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பலரும் களத்தில் குதித்துள்ளனர். பல்வேறு கட்சியினர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக வெளியூரை சேர்ந்த சிலரும் சீட் கேட்டு இலை கட்சி தலைமையிடம் காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கே சீட் ஒதுக்க வேண்டுமென ஊத்தங்கரை நகர்ப் பகுதியில் தற்போது சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. இந்திய குடியரசு கட்சியினர்தான் இந்த சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள்.