நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியினர் டெம்போ வேன்களை அமர்த்தி, பல கோடி ரூபாய் தொகையுடன் மதுரை, தேனி உட்பட தென் மாவட்டம் முழுக்க ஊரெல்லாம் வலம் வந்தனர். தொகையை கட்சி ஒன்றிய, நகர, பேரூராட்சி என ஒரு பகுதியையும் விடாமல் விநியோகம் நடத்தி உள்ளனர். இப்படி அள்ளி வீசி, பட்டுவாடா நடத்தியும் ஆளுங்கட்சியினரால் ஒற்றைத் தொகுதியை மட்டுமே போராடி எட்டிப் பிடிக்க முடிந்தது.