ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் என 4 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் மந்தமான செயல்பாடுகளால் ஆளுங்கட்சிக்கு செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. இதனைப்பயன்படுத்தி திருவாடானை உள்ளிட்ட தொகுதிகளில் தாங்கள்தான் போட்டியிடப் போவதாக தேர்தல் அறிவிப்பு துவங்கியதிலிருந்து, பாஜவினர் பெரும் பிரசாரமாகவே செய்து வருகின்றனர். இதனால், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இப்படியே விட்டால், மாவட்டத்தில் மீண்டும் தலையெடுக்க முடியாமல் போய்விடும் என தலைமைக்கு மனு மேல் மனு தட்டிக் கொண்டிருந்தனர்.