சென்னை: நிபுணர் குழுவின் இந்த பரிந்துரையின்’படி கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ‘சுருக்கு மடி வலை’யை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆழ் கடலில் மட்டுமே பவழப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் காணப்படும் போது, நாட்டுப்படகில் சென்று 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் ‘சுருக்கு மடி வலை’ கொண்டு மீன் பிடிப்பதால் அவற்றுக்கு எந்த பாதிப்பும் வராது.