மதுரை: மதுரை அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மணப்பாறை அருகே பச்சை மலை மற்றும் பெரியமலை வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனவிலங்குகள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன. வனவிலங்குகள் சாலையைக் கடக்க வசதியாக 3 இடங்களில் சுரங்க பாதை அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அமைக்கப்படவில்லை.