ஆறுமுகநேரி: திமுக குறித்து அவதூறாகவும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட காயல்பட்டினம் நகராட்சி அலுவலரை நகராட்சி ஆணையாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அறிவுடைநம்பி (48). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூடலூர் நகராட்சியில் இருந்து பணி மாறுதலாகி காயல்பட்டினம் நகராட்சியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக திமுக பற்றி அவதூறாகவும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் ஜாதி, மத ரீதியாகவும் வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.