சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2004ம் ஆண்டு தமிழ்மொழிக்கு செம்மொழி என்கிற அந்தஸ்து வழங்கப்பட்டது. 2008ல் சென்னையிலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துவங்கப்பட்டது.
அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை வழங்கி, அந்த நிதியின் மூலமாக தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்குவதற்கு வழிவகை செய்தார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக கடந்த 2010ம் ஆண்டு வரை விருதுகள் வழங்கப்பட்டு வந்தது.