நகைக் கடன்கள் தள்ளுபடி விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் கடிதம்: சங்கங்களின் பதிவாளர் அனுப்பினார்

சென்னை: நகைகடன் தள்ளுபடி அறிவிப்பு, நகைக் கடன் விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன், அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் என்றை அனுப்பியுள்ளார். அதில் இத்துடன் அனுப்பியுள்ள எக்‌ஸல் படிவத்தில் ஜனவரி 31ம் தேதி வரையிலான நகைக்கடன் விவரங்களை அனுப்புமாறு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் இணைப்பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தலைமை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் உரிய படிவத்தில் குறுந்தகட்டில் பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: