சென்னை: தமிழகத்தில் புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 50,783 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 494 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 3,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.