தங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த நைனார் முகமது (41), திருச்சியை சோ்ந்த ஜாகீர்உசேன் (49), அஜீத் அகமது(26) ஆகிய 3 பேர் ஒரு குழுவாக வந்தனர். அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்கக்கட்டிகள், தங்க பேஸ்ட் மறைத்து வைத்திருந்தனர். 3 பேரிடமிருந்தும் மொத்தம் 3.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.1.6 கோடி. இதையடுத்து சூட்கேசில் இருந்த 19 ஐபோன், விலை உயர்ந்த வாட்ச்கள், 19 பழைய லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.28 லட்சம். இதையடுத்து ரூ.1.88 கோடி.3 பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்தனர்

Related Stories: