சென்னை: துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த நைனார் முகமது (41), திருச்சியை சோ்ந்த ஜாகீர்உசேன் (49), அஜீத் அகமது(26) ஆகிய 3 பேர் ஒரு குழுவாக வந்தனர். அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்கக்கட்டிகள், தங்க பேஸ்ட் மறைத்து வைத்திருந்தனர். 3 பேரிடமிருந்தும் மொத்தம் 3.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.