பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே ஏரியில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி அக்கா, தம்பி பலியானார்கள். இச்சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. ஆர்.கே.பேட்டை அடுத்த சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி (11) என்ற மகளும், புருஷோத் (10) என்ற மகளும் இருந்தனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 மற்றும் 5ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில், 2 பேரும் குளித்து கொண்டிருந்தனர்.