பிளேடால் அறுத்து ஐடி ஊழியர் தற்கொலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சவுக்கு தோப்பில், ஐடி ஊழியர் கையை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் வாலிபர் ஒருவர் தனது இடது கையை அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், மதுரையை சேர்ந்த விவேக் (31). சென்னை, தி.நகரில் தங்கி, வேளச்சேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளாக தீராத ஒற்றை தலைவலி இருந்துள்ளது. இதற்காக, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமாகவில்லை என கூறப்படுறிது. இதனால் மனமுடைந்த விவேக், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தி.நகர் அறையில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லையென கடிதம் எழுதி வைத்துவிட்டு, மாயமானார். இந்நிலையில், நேற்று மாலை திருவிடந்தை சவுக்கு தோப்பில் சடலமாக மீட்கப்பட்டார் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: