உத்திரமேரூர்: உத்திரமேரூரில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், வரும் 2021 சட்ட மன்ற தேர்தலை யொட்டி மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், சீத்தாசீனுவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டாட்சியர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். மண்டல தேர்தல் பணியாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது, வாக்குசாவடிகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.