செங்கல்பட்டு: தென் மாவட்டங்களுக்கான எதிர்கால ரயில் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரூ.256 கோடி செலவில், 30 கிமீ தூரத்துக்கு 3வது அகல ரயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த 2016 பிப். 7ம் தேதி தாம்பரத்தில் நடந்த விழாவில், அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, 3வது ரயில் பாதை பணியை துவக்கி வைத்தார். இந்நிலையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அமைக்கப்படும் 3வது அகல ரயில்பாதை பணிகளில், தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே பணிகள் முடிவடைந்தது.