புதுடெல்லி: முழு சம்பளம் கேட்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா ஊரடங்கு காரணமாக டெல்லி சம்மர் பீல்டு என்கிற தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் இந்த சம்பளம் வழங்குவது நடைமுறைக்கு வந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் இப்போது வரை இன்னும் பழைய சம்பளம், அதாவது முழுச்சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் 7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பள்ளி கல்வித்துறை இயக்குனரகம்(தென்கிழக்குமண்டலம்) அலுவலகத்தில் கொடுத்தனர்.