வரதட்சணை கேட்டு பெண் கொலையில் தந்தை, மகனுக்கு 8 ஆண்டு ஜெயில்

காஜியாபாத்; வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை படுகொலை செய்த தந்தை, மகனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காஜியாபாத்தில் ஷிகானிகேட் போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்டவர் ஹரி. இவரது தந்தை மகேந்திரா. கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரேகா என்பவரை மகேந்திரா திருமணம் செய்தார். அதன்பின் வரதட்சணை கேட்டு ரேகாவை தொடர்ந்து கணவர் மகேந்திரா, அவரது பெற்றோர் ஹரி மற்றும் சகுந்தலா ஆகியோர் கொடுமைப்படுத்தினர்.

2014ம் ஆண்டு அவரை கொலை செய்ததாக ரேகாவின் சகோதராட் போலீசில் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் காஜியாபாத் சிறப்பு எஸ்சி/ எஸ்டி நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. வழக்கு விசாரணை நடத்து வந்த போது மகேந்திராவின் தாயார் சகுந்தலா இறந்துவிட்டார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக மகேந்திரா மற்றும் ஹரிக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related Stories: