காஜியாபாத்; வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை படுகொலை செய்த தந்தை, மகனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காஜியாபாத்தில் ஷிகானிகேட் போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்டவர் ஹரி. இவரது தந்தை மகேந்திரா. கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரேகா என்பவரை மகேந்திரா திருமணம் செய்தார். அதன்பின் வரதட்சணை கேட்டு ரேகாவை தொடர்ந்து கணவர் மகேந்திரா, அவரது பெற்றோர் ஹரி மற்றும் சகுந்தலா ஆகியோர் கொடுமைப்படுத்தினர்.