நஞ்சுண்டேஸ்வரா கோயிலில் 1.11 கோடி காணிக்கை

மைசூரு: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் நஞ்சன்கூடுவில் உள்ள நஞ்சுண்டேஷ்வரா கோயிலில் ஒரே மாதத்தில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 64 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.மைசூரு மாவட்டத்தில் புகழ்பெற்ற தலங்களில் ஒன்று நஞ்சன்கூடுவில் உள்ள நஞ்சுண்ேடஷ்வரா கோயில். கொரோனா தொற்றால் பக்தர்கள் வருகை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதையடுத்து ேகாயில் உண்டியல் காணிக்கை பணம் நஞ்சன்கூடு தாசில்தார் சர்மிளா மற்்றும் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது.இதில் கடந்த ஒரே மாதத்தில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 64 ஆயிரம் உண்டியல் பணம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: