சிவராத்திரி விழா ரத்து

சாம்ராஜ்நகர்: புகழ்பெற்ற மலை மாேதஸ்வரா மலையில் நடைெபறும் மகா சிவராத்திரி விழா இந்த வருடம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற மலை மாதேஸ்வரா மலையில் ஆண்டுேதாறும் மகா சிவராத்திரி விழா மார்ச் மாதம் 10ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நான்கு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த சிவராத்திரி விழாவில் சுமார் 4 லட்சத்துக்கும் ேமற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் நேற்று சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மலை மாதேஸ்வரா கோயில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா ெதாற்று காரணமாக இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: